Saturday, January 10, 2009

ஆதி அம் சோதி

ஆதி அம் சோதி (சென்ற இதழின் தொடர்ச்சி )
எழுதியவர் செல்வி வத்சலா ராஜன்
யார் என்ன பேசினால் என்ன?ஆவர்களின் ஏசெல்லாம் ஆழ்வாருடைய பக்திக்கு உரம் போட்டாற்போல அமைந்து விடுகிறது .
சோதி போன்ற ஒளி வீசும் எம்பெருமானை அடைந்த பிறகு வேறு எதுவும் என்ன செய்ய முடியும்? என்று ''மாசறு சோதி"யைப் பாடுகிறார். இதனால் ஆழ்வார் பக்கம் வந்த பெருமாளைப் பார்த்து, ''முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ"என்று வியந்து பாடுகிறார். அது மட்டுமல்ல. ''நான் உனதாகி விட்டேன், நீ எனதாகி விட்டாய் ...இந்த சந்தோஷத்தை நான் என்னவென்று சொல்லுவேன் ...
''என்னதாவி மேலையாய், ஏர்கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்
உன்னதென்னதாவியும், என்னதுன்னதாவியும்
இன்ன வண்ணமே நின்றது என்றுரைக்க வல்லனே"
என்று பாடுகிறார்.

No comments: