திருக்குறள் கீர்த்தனை
(தியாகபாரதி இதழில் இருந்து எடுத்தது)
(தியாகபாரதி இதழில் இருந்து எடுத்தது)
ராகம்: குந்தலவராளி தாளம்: கண்ட சாபு
பல்லவி
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற --என்றார் முனிவர்
நீங்கின் அதனைப் பிற --என்றார் முனிவர்
அனுபல்லவி
சடை முடியன் பூணாகி நகும் சிறிய நாகம்
இடம் மேவிச் சமா கொள்ளல் ஏற்றம் விவேகம்
இடம் மேவிச் சமா கொள்ளல் ஏற்றம் விவேகம்
சரணம்
இடருற்ற இபராஜன் எத்துணை பலவான்
மடு மீது மாபலம் பெற்றதே முதலை
இடம் முன்றினில் வாழும் இயல் பெற்ற மனிதா
இடமறிந்து இசை பாடு ஸ்ரீசேஷ தாசனோடு
மடு மீது மாபலம் பெற்றதே முதலை
இடம் முன்றினில் வாழும் இயல் பெற்ற மனிதா
இடமறிந்து இசை பாடு ஸ்ரீசேஷ தாசனோடு
No comments:
Post a Comment